தூக்க ஆய்வில் மூச்சு திணறி பலியான குழந்தை - ரூ.122 கோடி நஷ்ட ஈடு வழங்கிய வல்லரசு நாடு

x

தூக்கம் தொடர்பான ஆய்வின் போது குழந்தை உயிரிழந்த நிலையில், அமெரிக்க மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு 122 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியுள்ளது... உடல் வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையை போஸ்டன் குழந்தைகள் நல மருத்துவமனை தூக்கம் தொடர்பான ஆய்விற்கு உட்படுத்தியது. அப்போது போதிய ஆக்சிஜன் இல்லாமல் சுமார் 30 நிமிடங்கள் வரை போராடிய அக்குழந்தை இறுதியில் பரிதாபமாக உயிரிழந்து போனது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனையானது 122 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்