ரிட்டையர்டான பின் 250 பக்கம் தீர்ப்பு எழுதிய சென்னை ஐகோர்ட் நீதிபதி

x

ஐந்து மாத ஓய்வுக்கு பிறகு தீர்ப்பு கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த உச்சநீதிமன்றம், அவரது தீர்ப்பை ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் டி. மதிவாணன். இவர் கடந்த 2017, மே 26-ஆம் தேதி ஓய்வு பெற்றார். கிரிமினல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐந்து மாதங்கள் கடந்து அவர் கூறிய 250 பக்கங்களை கொண்ட தீர்ப்பை, அக்டோபர் 23-ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக சிபிஐ சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்த‌து. கிரிமினல் வழக்கு தொடர்பான கோப்புகளை நீதிபதி எடுத்துச் சென்று, ஐந்து மாதங்கள் வைத்துக் கொண்டு பின்னர் தீர்ப்பு எழுதிய செயல், மொத்தத்தில் ஒழுங்கின்மை செயல்பாடு என்று விமர்சித்த‌து. இந்த வழக்கில் நீதிபதி செய்த‌தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற உச்சநீதிமன்றம், அவர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்கும் வகையில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புவதாக தீர்ப்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்