மீண்டும் ஒரு காட்டு காட்டிய மழை..சென்னை மக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி

x

சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. நந்தனம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால்,

அண்ணாசாலையில் இருந்து ராயப்பேட்டை செல்லும் ஜி.பி.சாலை, புதுப்பேட்டை லேங்ஸ் கார்டன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பாதாசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி சார்பில் மோட்டர் மூலமாக மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் மற்றும் மழைநீர் தேங்கிய காரணத்தால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்