மின் கம்பி பிடித்த படியே இளைஞர் மரணம்...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

மின் கம்பி பிடித்த படியே இளைஞர் மரணம்...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவர் மது போதையில் மாடிக்கு தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் மாடியில் சென்று கொண்டிருந்த மின் வயரை பிடித்தவாறே உயிரிழந்திருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இச்சம்பவம் போதையில் நடைபெற்றதா, கொலையா, தற்கொலைய என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்