கார் நிறுத்துவதில் தகராறு... வெடித்த மோதல் - கட்ட‌டத்திற்கு தீ வைப்பு - 2 பேர் கொலை

x
  • பீகார் மாநிலம் பாட்னாவில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், கட்ட‌டம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஜெதுலி கிராமத்தில் கார் நிறுத்துவதில் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் மோதல் வெடித்த‌தால், போலீசார் விரைந்து சென்றனர்.
  • ஆனால், அவர்களால் சமாதானம் செய்ய முடியாத நிலையில், அங்கிருந்த க‌ட்ட‌டத்திற்கு ஒரு குழுவினர் தீ வைத்தனர்.
  • இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜெதுலி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்