பரபரப்பான சாலையில் பற்றி எரிந்த கார்..முற்றிலும் எரிந்து போன உடல் - அதிகாலையில் பதற்றம்

x

தீப்பிடித்து எரிந்த சாலையோரம் நின்ற காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. ஆலப்புழா குட்டநாட்டில் தாயங்கரி போட் ஜெட்டி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் அதிகாலை நான்கரை மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஓட்டுநர் இருக்கையில் ஆணின் சடலம் எரிந்த நிலையில் இருந்தது. உடல் முற்றிலும் எரிந்து போனதால் அடையாளம் காண முடியாத நிலையில், போலீஸ் விசாரணையில் கார் எடத்தவத்தை சேர்ந்த ஜேம்ஸ்குட்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்