மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

x

கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது . மேட்டுப்பாளையம் சிக்காரம் பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மூளை சாவு அடைந்ததை அடுத்து பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் முன் வந்தனர். இதையடுத்து பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. பிரபுவின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்