பகையாளியை பழிவாங்க பெட்ரோல் வீச்சு ...போற வழியில் கீழே விழுந்த குண்டு

x

மது​ரையில் பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மேலூர் - சிவகங்கை சாலையில், இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் இருவர் சென்றனர். 2 மதுபாட்டில்கள் மற்றும் காலி பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் நிரப்பி, அதில் திரி வைத்து கொண்டு மலம்பட்டி அருகே நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் சென்றுள்ளனர். அப்போது, பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஒருவர், தான் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் தீ வைத்து, சாலையில் வீசியுள்ளார். பாட்டில் உடைந்து பெட்ரோல் சிதறியதால் சாலையிலும், இருவர் மீதும் தீபற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து பெட்ரோல் கேனை சாலையோரத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பினர். சிவகங்கை கண்டவராயன் கட்டியை சேர்ந்த அப்பாவு தரப்பிற்கும், மற்றொரு தரப்பிற்கும் மோதல் காரணமாக பழிவாங்கவே இருவரும் பெட்ரோல் குண்டு தயாரித்து எடுத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அப்பாவு, அஜய் ஆகிய இருவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து ஆகாஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்