அனில் தேஷ்முக்குக்கு வழங்கப்பட்ட ஜாமின்... சிபிஐ தரப்பில் எதிர்த்து மேல் முறையீடு மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

x

ஊழல் வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்த சிபிஐயின் மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மேல்முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இதே குற்றச்சாட்டுகள் தொடர்புடைய அமலாக்கத் துறை வழக்கில் அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீன் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சிபிஐ மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்