'குரூப்' படம் போல் பயங்கரம்...இன்சூரன்ஸ் பணத்திற்கு பலே ப்ளான்..சொந்த காருக்கு சூனியம் வைக்க முயற்சி

x

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தனசிங் என்பவரின் வீட்டின் பின்புறம் போலீசார் சோதனை செய்தனர். அங்கு பெட்ரோல் நிரப்பப்பட்ட 10 பாலித்தீன் பைகள், பெட்ரோல் ஊற்றி திரி வைத்து பெட்ரோல் குண்டு தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு பீர் பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர். தனசிங்கை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தனது காரில் பெட்ரோல் குண்டை வீசி, அதன் மூலம் இன்சூரன்ஸ் பெறலாம் என்று 3 பேருடன் சேர்ந்து தனசிங் திட்டமிட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்