ரூ.30 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீஸ் கள்ளத்தனமாக விற்க முயற்சி!

x

தூத்துக்குடியில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்பர் கிரீசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீசை, தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சந்தேகத்திற்கிடமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 18 கிலோ எடை கொண்ட ஆம்பர் கிரீசை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன், ஆகிய நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸின் மதிப்பு 30 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்