ஒரு கோடி அபேஸ்... ஏஞ்சலிடம் ஏமார்ந்த இளைஞர்கள்!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
x


கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், SAFE MOON WORLD எனும் பெயரில் அலுவலகம் நடத்தி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 50-க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடி ரூபாய்-க்கு மேல் வாங்கி ஏமாற்றிய இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரியிருந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடுங்கையூரை சேர்ந்த ஏஞ்சல் எனும் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் வாங்கியது தெரியவந்தது. அவரிடம் இருந்து கம்யூட்டர், செல்போன், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஏஞ்சலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





Next Story

மேலும் செய்திகள்