மாடியில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுமி

x

திருவொற்றியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணா நாயுடு காலணியில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த பலராமன் என்பவரது 8 வயது மகள், 2வது மாடியின் பால்கனியில் விளையாடி கொண்டிருந்தது.

அப்போது தவறி கீழே விழுந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்