கடைக்கு வரும் பெண்களை படம் பிடித்து இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட இளைஞர் - அதிர்ந்து போன பெண்ணின் கணவன்

x

விழுப்புரம் அருகே மளிகை கடைக்கு வரும் பெண்களை செல்போனில் தவறாக படம் பிடித்து, தரக்குறைவான வசனங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் அலாவுதீன் . இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், அலாவுதீனின் மகன் முகமது ஜுபேர் அடிக்கடி கடைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்போது, கடைக்கு வரும் பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து, தரக்குறைவான வசனங்களுடன் முகமது ஜுபேர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ந்து போன பெண் ஒருவரின் கணவன் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு புகைப்படம் அலாவுதீனின் மளிகை கடையில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், அலாவுதீனின் மகன் முகமது ஜுபேரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் அம்பலமான நிலையில், முகமது ஜுபேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்