தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் - அதிகாலை வேளையில் நேர்ந்த பயங்கரம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நரசிங்கபுரம் தமிழரசன் நகரைச் சேர்ந்த சதீஷ், அதிகாலை வேளையில் இயற்கை உபாதையை கழிக்க, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்