தடம் மாறிய கணவரால் தவறானா முடிவெடுத்த மனைவி - சிக்கிய கடிதம் | Pallavaram | Chennai

x

சென்னை பல்லாவரம் அருகே, கணவன் வேறோரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து துன்புறுத்தி வந்ததால், மனமுடைந்த பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த தயாளனுக்கும், கார்த்திகா என்பவருக்கும் இடையே கடந்த 2005 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் இருந்த மின்விசிறியில், கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அவரது சகோதரர் கதிரவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முன் கார்த்திகா எழுதிய கடிதத்தையும் போலீசார் மீட்டனர்.

அதில், தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஸ்ரீமயுரி என்ற பெண்ணே காரணம் என எழுதப்பட்டிருந்தது.

அதனையடுத்து தயாளனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்