கொல்லம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அறையில் மட்டும் திடீர் தீவிபத்து - பரபரப்பு காட்சிகள்

x

கேரள மாநிலம் கொல்லம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் மேயர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தளவாடங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. மின்கசிவு தான் தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்