ரூபாய் ஒரு கோடியில் தார் சாலை - கையில் எடுத்தாலே பெயரும் கொடுமை - அதிர்ச்சி வீடியோ

x

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தரமற்ற முறையில் சாலைகள் போடப்பட்டுள்ளதாக மீனவ மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே ஏரக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் போடப்பட்டுள்ளன. அவை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாகவும், புதிதாக போடப்பட்ட சாலைகள் கைகளால் பெயர்த்து எடுக்க முடிவதாகவும் மீனவ மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தரமான சாலைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்