தட்டி கேட்ட கோவில் ஊழியர்... சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு - போதை ஆசாமிகளின் வெறிச்செயல்

x

தட்டி கேட்ட கோவில் ஊழியர்... சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு - போதை ஆசாமிகளின் வெறிச்செயல்


நெல்லையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் மது அருந்திய சிலரிடம், கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணனை அவர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடிவரும் நிலையில், 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்