ஓடும் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவன்..டயரில் சிக்கிய சோகம்..

x

சிவகங்கையில், அரசு பேருந்து டயரில் சிக்கி கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். நாலுகோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார். இவர், தனது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற போது, கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



Next Story

மேலும் செய்திகள்