திடீரென தீப்பிடித்து எரிந்த கார்...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்

x

கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சந்திரூர் பகுதியில் சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷ்ணு என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்த நிலையில், முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

பின்னர், கார் முழுவதுமாக தீப்பிடிக்க, சுதாரித்துக்கொண்ட விஷ்ணு, உடனடியாக காரை விட்டு இறங்கியதால், அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

இந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்