அரசு பேருந்துடன் கார் மோதி விபத்து..சுக்குநூறாக உடைந்த கார் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

x

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த 4 பேர், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது அவர்கள் சென்ற கார் அரசுப்பேருந்து மீது மோதியுள்ளது. இதில் பழனியப்பன், சதீஷ் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்