அசுர வேகத்தில் பைக் மீது மோதிய கார்... கல்லூரி சுவற்றில் தூக்கி வீசப்பட்ட நபர் - சென்னையில் பயங்கரம்

x

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 18 வயது ஸ்ரீ ஷிவ் விக்ரம் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அந்தக் கார் எதிரே வந்த பைக் மீது மோதியதில் பைக் பச்சையப்பன் கல்லூரி சுற்றுச் சுவர் மீது மோதியது. பைகை ஓட்டிச் சென்ற கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையைச் சேர்ந்த 45 வயது திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீஷிவ் விக்ரமை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீஷிவ் விக்ரம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டியுள்ளார். இவர் பள்ளி படிப்பினை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்ல உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பைக்கில் வந்த ஓட்டுநரான திருமுருகன் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்