சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் 70 வயது மருத்துவர் பாலியல் தொல்லை - ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்

x

சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் 70 வயது மருத்துவர் பாலியல் தொல்லை - ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்


ராமநாதபுரத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 70 வயது மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம், பாரதி நகரில் செயல்படும் மருத்துவமனையில், குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோய், இருதய நோய் சிகிச்சை மருத்துவராக ஜபருல்லாகான் என்பவர் இருந்து வருகிறார். இந்த மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக தனியார் கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். மாணவியிடம், மருத்துவர் ஜபருல்லாகான் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் ஜபருல்லாகானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிகிச்சைக்காக வந்த மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் வயதான மருத்துவர் ஈடுபட்டு கைதான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்