விபூதியை கீழே கொட்டியதற்காக 4 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை.. பார்ப்போரை கண் கலங்கவைக்கும் சம்பவம்

x

திண்டுக்கல் மாவட்டம் புங்கம்பாடியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகன் என 3 பிள்ளைகள். கணவர் உயிரிழந்த நிலையில் தன் 3 பிள்ளைகளை பராமரித்து வளர்த்து வருகிறார் முத்துலட்சுமி. இதில் உயிரிழந்த லோகநாதனின் அக்கா மகனான மணிகண்டன் வீட்டிற்கு முத்துலட்சுமியின் 4 வயது மகன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த விபூதியை சிறுவன் கீழே கொட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் சிறுவனுக்கு உடலெங்கும் சூடு வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தன் தாயிடம் கூறவே, அவர் குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்