பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை மாயம் | "கண்காணிப்பு கேமரா இல்லை...! " "காவலாளி மீது சந்தேகம்..!" | தாய் கண்ணீர் பேட்டி

x

குமரன் நகரைச் சேர்ந்த யூனிப் - திவ்யபாரதி தம்பதிக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், பிரசவ அறைக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், பச்சிளங் குழந்தையை திருடிச் சென்றுள்ளனர். குழந்தை மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா இல்லாததாலும், ஊழியர்கள் உரிய பதில் அளிக்காததாலும், குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இதனிடையே, குழந்தையை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது போலீசாரிடம் கிடைத்துள்ளது. இன்று மாலைக்குள் குழந்தையை கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையிலேயே காத்துக் கிடக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்