மேகாலயாவில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா...ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கின

மேகாலயா மாநிலத்தில், மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

மேகாலயா மாநிலத்தில், தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ என, மூன்று பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது தொடர்பான கடிதத்தை, மேகாலயா சட்டப்பேரவை சபாநாயகரிடம் வழங்கினர். அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்த எம்எம்ஏக்கள் மூன்று பேரும் பாஜகவில் இணைய போவதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் அலெக்சாண்டர் லாலு ஹெக் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்