மின்சாரம் தாக்கி 3 சினை மாடுகள் உயிரிழப்பு

x

ஆவடி அருகே மின்சாரம் தாக்கியதில் மூன்று சினை மாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பருத்திப்பட்டு அக்ரஹாரம் தெருவில் 3 சினை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகளும் உயிரிழந்தன.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்