மின்னல் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன் - அமைச்சர் உதயநிதிக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த குடும்பத்தினர்

x

சேலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது 12 வயது மகன் கோகுல்குமரன், கடந்த 29ஆம் தேதி மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் சேலம் சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுவனின் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கடலூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். இதனால் அவருக்காக காத்திருந்த சிறுவனின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஏமாற்றமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்