ஆறாக ஓடிய சாராயம்... பேரல், பேரலாய் 11,000 லி கள்ள சாராயம் - ஒட்டுமொத்தமாக அழித்த போலீசார்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 11 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது. தமிழக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள மாதகடப்பா மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட எஸ்.பிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, எஸ்.பி தனிப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, மாதகடப்பா மலைப்பகுதிகளில் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 11 ஆயிரம் லிட்டர் கள்ள சாராய ஊறல்கள், 500 லிட்டர் சாராயம் மற்றும் மூலப்பொருட்களை கண்டறிந்து அழித்தனர். மேலும், தப்பியோடி குற்றவாளிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்