ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. விமானம்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் சீறிப்பாய்ந்து சென்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
செங்கடல் பகுதியில் வணிக மற்றும் பயணிகள் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால், அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட இடங்களில், ஹவுதி நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.