இஸ்ரேல் அடுத்தடுத்த தாக்குதல்..பதிலுக்கு பதில்..ஹமாஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை

Update: 2025-03-18 08:22 GMT

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஹாமஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் அதிகரிக்கும் எனவும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இஸ்ரேல் - காசா இடையே 17 மாதங்களாக நடைபெறும் போரில் இதுவரை 48 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்