அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்த ஆப்பிரிக்க யானைகள், அலறிய காட்சிகள் வெளியாகி உள்ளது. சான் டியாகோ (San Diego) உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அந்த யானைகள், ஏதோ ஆபத்து நிகழப்போவதை உணர்ந்தன. உடனடியாக ஓரிடத்தில் திரண்ட யானைகள், குட்டிகளைப் பாதுகாக்கும் வகையில் அரண் அமைத்தன. நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நிமிடங்களுக்குப் பிறகே யானைகள் அமைதியானது.