திருச்செந்தூர் ராஜகோபுரத்தில், விரைவில் புதிய வேல் அமைக்கப்பட இருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜகோபுரத்திற்கு பொட்டு வைத்தது போல் காட்சித்தரும் 40 அடி உயரம் கொண்ட முருகனின் வேல் புதிதாக மாற்றப்படுகிறது. இதற்காக, நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வேல் கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜகோபுரம் பணிகள் நிறைவடைந்த உடன், மின் விளக்குகளால் ஒளிரும் இந்த பிரம்மாண்ட வேல் பொருத்தப்பட உள்ளது.