டிரான்ஸ்பார்மர் மீது ஏறி இளைஞர் தற்கொலை
தூத்துக்குடியில் உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி
இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் மின்தடை ஏற்பட்டு மாநகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் அவரது உடலை மீட்டனர். தற்கொலை செய்துகொண்டவர் வினோத் என்பதும் , அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story