அரசு பள்ளி மாணவர்களை மதமாற்ற முயற்சி? - தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி மதமாற்றம் முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்து துண்டு பிரசுரம் வழங்கிய 30க்கும் மேற்பட்டோரை பிடித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த அந்த கும்பலிடம் திருச்சிற்றம்பலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.