9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தஞ்சாவூரில் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அளித்த புகாரின் பேரில், ஜபருல்லா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.