தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். 22 வயதாகும் ராமமூர்த்தி என்ற இளைஞர் மேஸ்திரி ஆக வேலைபார்த்து வந்த நிலையில், சிறுமி ஒருவரை ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமமூர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து,, சிறையில் அடைத்தனர்.