``உத்தரவுக்கு கீழ்ப்படியல.. நேர்ல வாங்க’’ - அரசு செயலாளருக்கு அதிரடி காட்டிய Madras Highcourt
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சமுக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வருகிற ஏப்ரல் 1ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளராக இருந்த தாய் உயிரிழந்ததை அடுத்து கருணை அடிப்படையில் மகன் பணி கோரியது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு அதிகாரியின் நடத்தை நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாததை காட்டுவதால், சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.