முதலாளியின் ஓவர் கெடுபிடி... ஊழியர் கையில் கொண்டு சென்ற பொருள் - கோவையை பதற வைத்த சம்பவம்
கோவையில் பெட்ரோல் குண்டு வீச வந்த ஊழியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்தவர் நாசர். இவர் தனது முதலாளியான மணிகண்டனிடம் அவசர தேவைக்காக 5000ம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். முதலாளி பணம் தர மறுத்த காரணத்தால் ஆத்திரமடைந்த நாசர், தான் பணி செய்த கடையை எரிப்பதற்காக பெட்ரோல் குண்டுகளுடன் சென்ற போது போலீசாரிடம் சிக்கினார். நாசர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிட தக்கது.