புயல் வேகத்தில் வந்து மோதிய கார் - நூலிழையில் தப்பிய உயிர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி
ஈரோடு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு கைகாட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் விதுபாலா. இவர் தனது காரில் பெருந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றோரு கார், விதுபாலாவின் கார் மீது அதிவேகமாக மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது.