திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஓம் சக்தி கோஷம் விண்ணை முட்டியது. தளிரோடு மற்றும் பொள்ளாச்சி சாலை சந்திப்பில் தேர் திரும்பும் போது நகராமல் நின்ற நிலையில் , கேரள பகுதியிலிருந்து வரவழைக்கபட்டிருந்த மணிகண்டன் என்ற யானை நகராமல் நின்ற தேரை முட்டிதள்ளியது. இதையடுத்து, தேர் நகர தொடங்கியதும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.