பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் காலை
உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூர் அரசுப்பள்ளியில் காலை உணவை சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.