சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரத்தில் 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து உள்ளாட்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.