மாட்டு வண்டி பந்தயம் - ரசிகர்கள் உற்சாகம்
திருப்பத்தூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயிலில், பூத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Next Story
