சென்னையில் ஹாலிவுட்..! தமிழ் சினிமாவை Next Level எடுத்து சொல்லும் ஏ.ஆர். ரஹ்மான்

Update: 2024-09-23 02:12 GMT

கும்மிடிப்பூண்டி அருகே அதிநவீன மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகை கிராமத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி அமைந்துள்ளது. இதில், Virtual Production Studio எனப்படும் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக் கூடத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணி ரத்னம், ஸ்ரீதர் சந்தானம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த பிரம்மாண்ட ஸ்டூடியோவில், சினிமா சார்ந்து பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. கலைஞர்கள் கணினி காட்சியமைப்புடன் கற்பனை செய்ததை, அப்படியே வடிவம் கொடுக்கும் வசதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை இனி சென்னையில் பயன்படுத்தலாம் என ஏ.ஆர். ரஹ்மான் பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்