
உலகக்கோப்பை கோ-கோ போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. முதல் கோ கோ உலகக்கோப்பை தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் காலிறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி நூற்றுக்கு 40 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது.