கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியான யுவராஜ் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக ஜாமினில் வெளிவந்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததற்கு அவரது மனைவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சுவிதா யுவராஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுவதால், தனது கணவரை கொலையாளி என கூறுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். நாங்கள் குற்றவாளி அல்ல என நிரூபித்து அனைவரும் வெளியே வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.