"ஒரு சரக்கு வாங்கினால் இன்னொன்று இலவசம்.." - கடைமுன் திரண்ட மதுப்பிரியர்கள்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மது கடைகளில் ஒரு மதுபாட்டில் வாங்கினால் இன்னொரு மது பாட்டில் இலவசம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குதூகலம் அடைந்த குடிமகன்கள் நொய்டா, முசாஃபர் நகர், ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளின் முன்பு திரண்டுள்ளனர். எதிர்வரும் புதிய நிதியாண்டில் லைசன்ஸ் இல்லாமல் மதுபானங்களை விற்க முடியாது என அரசு அறிவித்துள்ளதால் கிடைக்காத மதுபான விற்பனையாளர்கள் மார்ச் 31 வரை இந்த ஆஃபரை அறிவித்துள்ளனர்.