திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று பக்தர்கள் மூலம் ஒரே நாளில் 2 கோடியே 45 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர், அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயும், ஸ்ரீலங்காவை சேர்ந்த பக்தர் ஒரு கோடி ரூபாயும், நொய்டாவை சேர்ந்த பக்தர் 45 லட்ச ரூபாயையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.